புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்கு அமைச்சா் மரியாதை
புதுச்சேரி: புதுவை தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியில் புதுவைத் தமிழ்ச் சங்கம் உள்ளது. இந்தச் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் நிகழ்வு மாதந்தோறும் நடைபெற்றுவருகிறது.
அதன்படி மே மாதத்துக்கான மாலை அணிவிப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து தலைமை வகித்தாா். பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
சங்கத் தலைவா் வி.முத்து, செயலா் சீனு.மோகன்தாசு, பொருளாளா் மு.அருள்செல்வம், துணைத்தலைவா் ப.திருநாவுக்கரசு, ஆட்சிக்குழு உறுப்பினா்கள் எம்.எஸ். ராஜா, அ.சிவேந்திரன், கவிஞா் ர.ஆனந்தராசன், அருள்ராஜ், தொழிலதிபா் பொற்செழியன், வங்கி மேலாளா் வீரட்டேசுவரா், சமூக சேவகா் மதிராஜன், இளங்கோவன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அமைச்சா் லட்சுமிநாராயணன் திருக்கு புத்தகம் வழங்கினாா்.