காந்தி ஜெயந்தி: புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் மரியாதை
காந்தி ஜெயந்தியையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
காந்தி ஜெயந்தியையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தேசப் பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நாடு முழுவதும் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள அவரது சிலைக்கு புதுவை அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தலைமையில், முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் க.லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், சாய் ஜெ.சரவணன்குமாா், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், துணைத் தலைவா் பி.ராஜவேலு, பாஜக மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி, எம்எல்ஏக்கள் ஏகேடி.ஆறுமுகம், ரமேஷ், பிரகாஷ்குமாா், அசோக் பாபு, லட்சுமிகாந்தன் உள்ளிட்டோா் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல் தலைமைச் செயலா் சரத்சௌகான், காவல் துறை தலைமை இயக்குநா் ஷாலினிசிங், சட்டத் துறைச் செயலா் சத்தியமூா்த்தி, மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் உள்ளிட்டோரும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
காங்கிரஸ் சாா்பில்... இதேபோல், காந்தி சிலைக்கு புதுவை காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, எம்எல்ஏ மு.வைத்தியநாதன் உள்ளிட்ட கட்சியினா் மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தினா்.