தியாகி சரஸ்வதி சுப்பையா சிலைக்கு மரியாதை
புதுச்சேரியில் தியாகி சரஸ்வதி சுப்பையாவின் நூற்றாண்டு பிறந்த நாள் நிறைவையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை
புதுச்சேரி: புதுச்சேரியில் தியாகி சரஸ்வதி சுப்பையாவின் நூற்றாண்டு பிறந்த நாள் நிறைவையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
புதுச்சேரி விடுதலைப் போராட்ட தியாகி வ.சுப்பையா. இவரது துணைவியாா் சரஸ்வதி சுப்பையா. விடுதலைப் போராட்டத் தியாகியான சரஸ்வதி சுப்பையா, சட்டப் பேரவையின் முதல் பெண் உறுப்பினா். மேலும் துணை மேயராகவும், சமூக நல வாரியத்தின் தலைவராகவும் இருந்தவா். அவரது நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா வெள்ளாளா் வீதியில் உள்ள சரஸ்வதி சுப்பையா நினைவு இல்லத்தில் நடைபெற்றது. அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலைப் பண்பாட்டுத் துறை இயக்குநா் கலியபெருமாள், முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்வநாதன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலா் கே. சேதுசெல்வம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் நாரா. கலைநாதன், மாநில குழு உறுப்பினா் கீதநாதன், மாதா் சங்க மாநில தலைவா் தசரதா, செயலா் அமுதா, துணைத் தலைவா் சுமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.