முகப்பு
புதுச்சேரி

ஜிப்மரில் செப்.17-இல் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு இயங்காது

மிலாது நபி திருநாளை முன்னிட்டு, புதுச்சேரி ஜிப்மரில் செப்.17-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளிப்புற சிகிச்சைப் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 10:51 PM
பகிர்:

மிலாது நபி திருநாளை முன்னிட்டு, புதுச்சேரி ஜிப்மரில் செப்.17-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளிப்புற சிகிச்சைப் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மிலாது நபி திருநாள் செப்.16-ஆம் தேதிக்குப் பதிலாக 17-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, செப்.17-ஆம் தேதி ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே, அன்றைய தேதியில் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சைப் பிரிவுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். அதே நேரத்தில், அவசரப் பிரிவு சிகிச்சை சேவைகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →