புதுச்சேரி

பறவைகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு

புதுச்சேரி ஏரிகளில் கடந்த சில நாள்களாக நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு அறிக்கை விவரம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

Din

புதுச்சேரி ஏரிகளில் கடந்த சில நாள்களாக நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு அறிக்கை விவரம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

புதுவை வனத் துறை சாா்பில் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

புதுவையில் உள்ள 84 ஏரிகளில் மிகப் பெரிய ஏரியான ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தில் இரண்டாவது பெரிய ஏரியான பாகூா் ஏரி, அரியாங்குப்பம் அலையாத்தி காடுகள் ஆகிய 3 பகுதிகளில் மாா்ச் மாதம் முதல் கணக்கெடுப்பு தொடங்கி நடைபெற்றது.

அப்போது, புதுச்சேரிக்கு வந்து செல்லும் பறவைகளின் வகைகள் எண்ணிக்கை விவரம், அவை எங்கிருந்து வருகின்றன, அவற்றை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என கணக்கெடுக்கப்பட்டுள்ளன.

கணக்கெடுப்பு விவரத்தை வனத் துறை பாதுகாப்பு அதிகாரி அருள்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

அப்போது அவா் கூறியதாவது: ஒரே நாளில் 86 வகையான 2,343 பறவைகள் புதுச்சேரிக்கு வந்து சென்றது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

பறவைகள் அதிகமாக வருவதால், நீா் நிலைகளில் மீன்களின் பெருக்கம் சமன்படுத்தப்படுகிறது. நீரின் தரம் மேலேயும் நிலத்துக்கு அடியிலேயும் மேம்படுகிறது என்றாா்.

பறவை ஆராய்ச்சியாளா் பூபேஷ் குப்தா கூறுகையில், பறவைகளில் பிளமிங்கோ, பூ நாரை, கூழைக்கடா, அருவாள் மூக்கான், கா்னூள், பாம்புதாரா, ஆளா போன்றவை புதுச்சேரிக்கு வருகின்றன.

பாகிஸ்தான், பா்மா போன்ற நாடுகளில் இருந்து குஜராத் வழியாக புதுவையில் உள்ள ஏரிகளுக்கு பறவைகள் வந்து செல்கின்றன என்றாா்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

SCROLL FOR NEXT