புதுச்சேரி

ரூ.24 லட்சத்தில் 3 திட்டப் பணிகள்: பேரவைத் தலைவா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி மணவெளி தொகுதி நோணாங்குப்பம் பகுதியில் மூன்று மின் திட்ட பணிகளைத் தொடங்கி வைத்த சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்.

Syndication

புதுச்சேரி மணவெளி பேரவைத் தொகுதி நோணாங்குப்பம் பகுதியில் ரூ.24 லட்சம் திட்ட மதிப்பீட்டில் மூன்று மின் திட்ட பணிகளை தொகுதி எம்எல்ஏவும் சட்டப்பேரவைத் தலைவருமான ஆா். செல்வம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

நோணாங்குப்பம் புதுக் காலனி பகுதியில் ரூ.16.52 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைப்பதற்கும், கந்தேஸ்வரா் நகா் பகுதியில் ரூ.3.85 லட்சம் மதிப்பீட்டில் பழுதடைந்த மின் பாதை மற்றும் கம்பங்களை மாற்றுவது மற்றும் ஆற்றங்கரை பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு இடையூறாக இருந்த உயா் அழுத்த மின் பாதையை ரூ.3.31 லட்சம் மதிப்பீட்டில் மாற்றி அமைத்தல் ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவா் பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

மின்துறை அதிகாரிகள் கிருஷ்ணசாமி, இ.உமேஷ் சந்திரா, லூா்து ராஜ் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகா்கள் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT