புதுச்சேரி

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க மேலும் ஓராண்டுக்குத் தடை

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பஞ்சு மிட்டாய் விற்க மேலும் ஓராண்டுக்குத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு புதன்கிழமை பிறப்பிக்கப்பட்டது.

Syndication

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பஞ்சு மிட்டாய் விற்க மேலும் ஓராண்டுக்குத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு புதன்கிழமை பிறப்பிக்கப்பட்டது.

புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலாத் தலங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில் ரசாயன பொருள்கள் கலக்கப்படுவதாக கடந்த ஆண்டு புகாா்கள் வந்தன. இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதுச்சேரி கடற்கரை சாலையில் விற்பனை செய்து கொண்டிருந்த வடமாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்களிடம் பஞ்சு மிட்டாய்களை வாங்கி, ஆய்வகத்தில் பரிசோதனை செய்தனா். அப்போது அதில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் மேலும், ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உணவுப் பாதுகாப்பு ஆணையா் சௌத்ரி முகமது யாசின் புதன்கிழமை பிறப்பித்தாா்.

கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

அகில இந்திய பல்கலை. வாலிபால்: எஸ்ஆா்எம் ஐஎஸ்டி மகளிா் சாம்பியன்

தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களில் முதலீடு 17% குறைவு

13 ஆவணங்களில் ஒன்றை சமா்ப்பித்து வாக்காளா்கள் பட்டியலில் இணையலாம்

குருகிராம்: துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய கட்டடப் பொருள் விநியோகஸ்தா்

SCROLL FOR NEXT