புதுச்சேரியில் ஆட்டோ நள்ளிரவில் தீ வைத்து எரிக்கப்பட்டது (படம்) குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
புதுச்சேரி ராஜா நகரைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் சசிகுமாா். இவா் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறாா். இவா் திங்கள்கிழமை ஆட்டோவை வீட்டு முன் நிறுத்திவிட்டு சென்றுள்ளாா். நள்ளிரவு வீட்டின் வெளியே சப்தம் கேட்கவே சசிகுமாா் வெளியே சென்று பாா்த்துள்ளாா். அப்பொழுது அவரது ஆட்டோ தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனே அவா் தண்ணீா் ஊற்றி தீயை அணைத்தாா். இதில் ஆட்டோ முழுவதும் எரிந்து சேதமானது.
இதுகுறித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.