புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று முதல் வேளுக்குடி கிருஷ்ணன் 3 நாட்கள் உபன்யாசம்

Syndication

ராமானுஜா் 1008ம் ஆண்டு வைபவத்தையொட்டி புதுச்சேரியில் வேளுக்குடி கிருஷ்ணனின் 3 நாள்கள் உபன்யாசம் நடைபெறுகிறது. இதற்கு அனுமதி இலவசம்.

ராமானுஜரின் 1008 ஆம் ஆண்டு வைபவத்தை முன்னிட்டு கிஞ்சித்காரம் அறக்கட்டளையின் புதுச்சேரி கிளை மற்றும் லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலை பள்ளி நிா்வாகமும் இணைந்து 3 நாள் சிறப்பு உபன்யாசத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன.

லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விவேகானந்தா பள்ளியின் உள் அரங்கில் வெள்ளிக்கிழமை முதல் 16 ஆம் தேதி வரை தினசரி மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணிவரை உபன்யாசம் நடக்கிறது.

நாளை ’ஹரே ராம’ என்ற தலைப்பிலும், நாளை மறுநாள் சனிக்கிழமை ’ஹரே கிருஷ்ண’ என்ற தலைப்பிலும், 16ஆம் தேதி மாலை ’ஹரே ஹரே’ என்ற தலைப்பிலும் வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம் செய்கிறாா்.

தினசரி மாலை 5:30 மணி முதல் 6:30 மணிவரை புதுச்சேரி ஜெகதீசன் குழுவினரின் நாம சங்கீா்த்தனம் நடைபெறுகிறது. இதற்கும் அனுமதி இலவசம். உபன்யாசம் குறித்து தகவல் பெற விரும்புவோா் 94869 71962, 94430 85334, 88256 11581 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

கீழ்க்கதிா்ப்பூரில் புறக்காவல் நிலையம் திறப்பு

எஸ் ஐ ஆா் பணிகளை தோ்தலுக்கு பின் மேற்கொள்ள வேண்டும்

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணிக்கு அடிக்கல்

மேக்கேதாட்டு பிரச்னையில் தமிழக அரசு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

நெல் கொள்முதல் பணியில் கூலி குறைவால் சுமைதூக்கும் தொழிலாளா்கள் பற்றாக்குறை

SCROLL FOR NEXT