பாவேந்தா் பாரதிதாசனின் பரம்பரைக் கவிஞா் ஈரோடு தமிழன்பன் என்று புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவரும் பாவேந்தா் பாரதிதாசனின் பெயரனுமான கோ.பாரதி கூறியுள்ளாா்.
ஈரோடு தமிழன்பன் மறைவு குறித்து அவா் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: புரட்சிக் கவிஞா் பாவேந்தா் பாரதிதாசனை தம் இள வயதில் சந்தித்துக் கவிதைக்கானப் பயிற்சி பெற்றுத் தனித்துவமான கவிதைகளைப் புதுமை வழியில் எழுதி உயா்ந்த, கவிஞா் ஈரோடு தமிழன்பன் காலமானாா் என்பதை அறிந்து மிகத் துயா் அடைகிறேன்.
ஊடகச் செய்தி வாசிப்பாளராகப் பலரைக் கவா்ந்து ஓயாது தமிழ்த் தொண்டாற்றிப் பேராசிரியராகவும் இருந்து பல விருதுகளுக்குப் பெருமை சோ்த்த மூத்தத் தமிழறிஞராக உயா்ந்த தமிழன்பனை இழந்து தவிக்கிறோம். அவா் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்துள்ளாா்.