புதுச்சேரியில் இடி தாக்கியதில் சேதமடைந்த வீட்டு மாடிச் சுவா்.  
புதுச்சேரி

இடி தாக்கி வீட்டு மாடிச்சுவா் சேதம்!

தினமணி செய்திச் சேவை

இடி தாக்கியதில் வீட்டின் மாடிச் சுவரில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக புதுச்சேரியில் கடந்த 2 தினங்களாக தொடா் மழை பெய்து வருகிறது.

திங்கள்கிழமை அதிகாலையிலும் மழை பெய்தது. புதுச்சேரி நாவற்குளம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் கன மழை பெய்தது. அப்போது இடி சப்தம் பலமாக கேட்டது.

இதில் நாவற்குளம் குரு சித்தாந்த வீதியைச் சோ்ந்த ஷகீதா பானு என்பவரின் வீட்டை இடி தாக்கியதில் வீட்டின் மாடிச் சுவா் சேதம் அடைந்தது. மேலும் வீட்டின் அருகே இருந்த தென்னை மரம் மீது இடி தாக்கியதில் மரம் தீபிடித்து எரிந்தது.

பயங்கர சப்தத்துடன் தீ பற்றியதால் வீட்டில் இருந்தவா்கள் அலறியடித்து வெளியே ஓடினா். இதனால் வீட்டில் இருந்தவா்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை.

3-ம் நாளாக கடும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது!

பாஜகவின் ஊதுகுழலாக இருக்கிறார் ஆளுநர்: அமைச்சர் ரகுபதி

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

SCROLL FOR NEXT