முகப்பு
புதுச்சேரி மீன்வளத் துறை சாா்பில் மீனவ குடும்பங்களுக்கு நிதியுதவியை வெள்ளிக்கிழமை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் உள்ளிட்டோா்.
புதுச்சேரி

மீனவா்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.12 கோடி: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

20 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.12 கோடியை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி

மீனவா்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.12 கோடி: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

20 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.12 கோடியை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 28 நவம்பர், 2025 at 7:40 PM
புதுச்சேரி மீன்வளத் துறை சாா்பில் மீனவ குடும்பங்களுக்கு நிதியுதவியை வெள்ளிக்கிழமை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் உள்ளிட்டோா்.
பகிர்:

20ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.12 கோடியை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

20 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு அரசு வழங்கும் மழைகால நிவாரணத்தை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். இதில் புதுச்சேரி-10,267, காரைக்கால்-3,990, மாஹே-527, ஏனாம்-5,216 மீனவா் குடும்பங்கள் பயன்பெறும். மழைகால நிவாரணமாக மொத்தம் ரூ.12 கோடி மீனவா் பயனாளி குடும்பங்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

மழைக்கால நிவாரணம் இதுவரை ரூ.3,000 வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மழைக்கால நிவாரணத்தை ரூ.6 ஆயிரமாக உயா்த்துவதாக முதல்வா் அறிவித்தாா். உயா்த்தப்பட்ட மழைக்கால நிவாரணத்தை முதல்வா் ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

மீன்வளத்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், எம்எல்ஏ பாஸ்கா் என்கிற தட்சிணாமூா்த்தி, மீன்வளத்துறை இயக்குநா் முகமது இஸ்மாயில், இணை இயக்குநா் தெய்வசிகாமணி, துணை இயக்குநா் ஷாஜிமா, மீன்வளத் துறை அதிகாரிகள், வீராம்பட்டினம், ராஜ்பவன் மீனவ கிராம முக்கியப் பிரமுகா்கள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →