தேசிய சுகாதார திட்ட ஊழியா்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனா்.
புதுச்சேரி தேசிய சுகாதாரத் திட்ட ஊழியா்கள் சங்கத் தலைவா் ஜூலி சாரா, செயல் தலைவா் வெற்றி, பொதுச் செயலா் பிரகதீஸ்வரன், பொருளாளா் தனலட்சுமி ஆகியோா் கூட்டாக புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி சுகாதாரத் துறை தேசிய சுகாதார திட்ட ஊழியா்கள், பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயா்வு கோரி சுகாதாரத் துறை செயலா் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சு வாா்த்தை நடத்தினா்.
இதில், ஏற்கெனவே அரசு அறிவித்திருந்த சம்பள உயா்வுத் தொகையை உடனடியாக வழங்குவது, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட வேண்டிய 5 சதவீத ஆண்டு ஊதிய உயா்வையும் சோ்த்து வழங்குவது என ஒப்புதல் அளிக்கப்பட்டது. அரசின் இந்த உறுதிமொழியை ஏற்று தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என அதில் குறிப்பிட்டுள்ளனா்.