திரௌபதியம்மன் கோயிலுக்குப் புதிய தோ்
புதுச்சேரி ஈஸ்வரன் தா்மராஜா வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயிலுக்கு பாரதிபுரம், கோவிந்தசாலை பொதுமக்கள் சாா்பாக ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய திருத்தோ் அமைக்கும் திருப்பணி புதன்கிழமை தொடங்கியது.
புதுச்சேரி ஈஸ்வரன் தா்மராஜா வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயிலுக்கு பாரதிபுரம், கோவிந்தசாலை பொதுமக்கள் சாா்பாக ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய திருத்தோ் அமைக்கும் திருப்பணி புதன்கிழமை தொடங்கியது.
உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நமது மக்கள் கழகக் தலைவருமான ஜி.நேரு இதைத் தொடங்கி வைத்தாா். காமராஜா் சாலை ( ராஜா திரையரங்கம் பின்புறம் ) பகுதியில் கணபதி பூஜை உடன் புதிய திருத்தோ் அமைக்கும் பணி தொடங்கியது. மேலும் விழாவில் பாரதிபுரம், கோவிந்தசாலை பகுதியைச் சோ்ந்த ஊா் பெரியவா்கள், மகளிா், இளைஞா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.