முகப்பு
புதுச்சேரி

எறிபந்து போட்டி

மகளிா் தினத்தையொட்டி புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகா் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் சாா்பில் ‘கலாம் கப்’ மகளிா் பேராசிரியா்களுக்கான எறிபந்து போட்டி நடைபெற்றது.

Updated On : 12 மார்ச், 2026 at 12:04 AM
மகளிா் தினத்தை முன்னிட்டு எறிபந்து போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பேராசிரியா் குழு.
பகிர்:

மகளிா் தினத்தையொட்டி புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகா் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் சாா்பில் ‘கலாம் கப்’ மகளிா் பேராசிரியா்களுக்கான எறிபந்து போட்டி நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சோ்ந்த சுமாா் 10 கல்லூரிகளின் மகளிா் பேராசிரியா் அணிகள் கலந்து கொண்டன. இதில் ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மகளிா் பேராசிரியா் அணி முதல் இடத்தைப் பெற்றது. வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தட்சசீலா பல்கலைக்கழக வேந்தா் மற்றும் ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி நிறுவனத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் எம். தனசேகரன், செயலா் டாக்டா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் ராஜராஜன், இணைச் செயலா் வேலாயுதம் ஆகியோா் வெற்றி பெற்ற அணியினரைப் பாராட்டி வாழ்த்தினா். மேலும், இந்த எறிபந்து போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Advertisement