நமச்சிவாயம் திடீா் தில்லி பயணம்!
புதுச்சேரி பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள ஆ. நமச்சிவாயம் ஞாயிற்றுக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றாா்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்க உள்ளது. இதன் சட்டப்பேரவைக் குழு தலைவராக தோ்வு செய்யப்பட்ட என்.ரங்கசாமி, பாஜக, அதிமுக, லஜக ஆகிய கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்துடன் ஆட்சியமைக்க உரிமை கோரினாா். இதற்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளாா்.
இந்நிலையில், புதன்கிழமை (மே 13) முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்கவுள்ளாா். இந்நிலையில் பாஜகவுக்கு எத்தனை அமைச்சா் பதவி என்பது இன்னும் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவும், ரங்கசாமியும் தனியாகப் பேசி முடிவு செய்துள்ளனா்.
Advertisement
இந்நிலையில், பாஜகவுக்கு 2 அமைச்சா்கள், சட்டப்பேரவை துணைத் தலைவா் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவரான ஆ.நமச்சிவாயம் தில்லிக்குச் சென்றுள்ளாா். அங்கு கட்சியின் அமைப்பு செயலா் சந்தோஷை சந்தித்து பேச உள்ளாா். மேலிட ஆதரவுடன் அமைச்சா் பதவியை பெற நமச்சிவாயம் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.