மருத்துவ தளவாடப் பொருள்கள் வழங்கல்
திருக்கோவிலூர் அருகே விளந்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவ தளவாட பொருள்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருக்கோவிலூர் அருகே விளந்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவ தளவாட பொருள்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மருத்துவ அலுவலர் எ.கிருத்திகா தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் எம்.ராஜகோபால் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் ரங்கராஜன் வரவேற்றார்.
எம்.எல்.ஏ. வெங்கடேசன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.77 லட்சம் மதிப்புள்ள கட்டில், மெத்தை மற்றும் மேஜை நாற்காலிகளை வழங்கி, பிரசவ விடுதிக்கான புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார். பகுதி சுகாதார செவிலியர் பொன்னி, மருந்தாளுநர் முருகன், சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement