விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் 47ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை திண்டிவனத்தில் நடைபெற்றது.
காந்திசிலை அருகில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் எம்.விநாயகம் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ஆர்.பி.ரமேஷ் பொதுமக்களுக்கு இனிப்பு, மதிய உணவை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 23ஆவது வார்டில் காங்கிரஸ் கட்சிக் கொடியை மாவட்டத் தலைவர் ஏற்றி வைத்தார். 2019இல் ராகுல்காந்தியை பாரதப் பிரதமராக பதவியேற்க பாடுபடுவது எனும் உறுதிமொழி அனைவராலும் ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.வி.தனுசு, மாவட்ட பொதுச்செயலர் கே.ஜி.சுப்பையா, மாவட்டத் தலைவர் வி.ஜானி, மாவட்ட சேவாதளத் தலைவர் டி.மதன்குமார், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொன்.ராஜா, வட்டாரத் தலைவர்கள் வி.சீத்தாராமன், எம்.சேகர், எம்.தட்சணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.