விழுப்புரம்

திருக்கோவிலூர் வழியாக தாம்பரத்துக்கு ரயில் இயக்க வலியுறுத்தல்

DIN

திருக்கோவிலூர் வழியாக திருவண்ணாமலை-தாம்பரம் இடையே மீண்டும் பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
திருக்கோவிலூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் 13-ஆவது வட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வட்டக்குழு உறுப்பினர் எம்.பழனி தலைமை வகித்தார். வட்டக்குழு உறுப்பினர் செல்வம் முன்னிலை வகித்தார். நகரக்குழு உறுப்பினர் பழனிச்சாமி மாநாட்டு கொடியேற்றி வைத்தார்.
மாநிலக்குழு உறுப்பினர்  ஜி.ஆனந்தன், மாவட்டச் செயலர் டி.ஏழுமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம் ஆகியோர் பேசினர்.    வட்டச் செயலராக ஏ.ஆர்.கே.தமிழ்ச்செல்வன், வட்டக்குழு உறுப்பினர்களாக  சு.வேல்மாறன், ஆர்.தாண்டவராயன், எம்.பழனி, ஆர்.ராஜவேல், ஏ.வி.கண்ணன், எம்.ஏழுமலை, பி.மோகன், எம்.பார்வதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  
திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க,  திருக்கோவிலூரில் அரசு காகிதத் தொழிற்சாலை அமைக்க, திருக்கோவிலூர் வழியாக திருவண்ணாமலை-தாம்பரம் இடையே மீண்டும் பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT