விழுப்புரம்

விவசாயக் கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

DIN

உளுந்தூர்பேட்டை அருகே விவசாயக் கிணற்றில் இருந்து ஆண் சடலம் மீட்கப்பட்டது.
உளுந்தூர்பேட்டை வட்டம், சேந்தமங்கலம் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சனிக்கிழமை சடலமாகக் கிடந்தார்.  இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவர்கள் திருநாவலூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
காவல் ஆய்வாளர் பி.ராஜேந்திரன், உதவி ஆய்வாளர் எழிலரசி மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்குச்  சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

SCROLL FOR NEXT