திருநங்கை தற்கொலை
ஆசனூர் அருகே மரத்தில் தூக்கிட்டு திருநங்கை தற்கொலை செய்து கொண்டார்.
ஆசனூர் அருகே மரத்தில் தூக்கிட்டு திருநங்கை தற்கொலை செய்து கொண்டார்.
உளுந்தூர்பேட்டை வட்டம், ஆசனூரிலிருந்து கடலூர் மாவட்டம், வலசை கிராமத்துக்குச் செல்லும் சாலையில் கன்னிமார் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் எதிரே உள்ள மரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் சனிக்கிழமை தூக்கிட்டுக் கொண்டார்.
இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், எடைக்கல் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.