விழுப்புரம்

குண்டர் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரி கைது

தினமணி

திண்டிவனம் அருகே சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 திண்டிவனம் அருகே சலவாதி பகுதியைச் சேர்ந்த ஜெயபால் மகன் ஜெகதீசன்(35) . இவர், அந்தப் பகுதியில் மதுக் கடத்தல், சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். இதுதொடர்பாக, திண்டிவனம் மது விலக்கு போலீஸார் ஜெகதீசனை கைது செய்தனர். இதுபோன்ற சட்டவிரோத சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு அவரை, குண்டர் சட்டத்தீன் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல்துறை பரிந்துரைத்தது.
 இந்த நிலையில், கடலூர் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள ஜெகதீசனை, மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின்கீழ் போலீஸார் புதன்கிழமை கைது செய்து, மீண்டும் சிறையில் அடைத்தனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT