இருதயம், மூட்டு தேய்மான மருத்துவ முகாம்
விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் ரோட்டரி சங்கம், சேலம் குறிஞ்சி மருத்துவமனை இணைந்து இருதயம், மூட்டு தேய்மான இலவச மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
விழுப்புரம்இருதயம், மூட்டு தேய்மான மருத்துவ முகாம்
விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் ரோட்டரி சங்கம், சேலம் குறிஞ்சி மருத்துவமனை இணைந்து இருதயம், மூட்டு தேய்மான இலவச மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் ரோட்டரி சங்கம், சேலம் குறிஞ்சி மருத்துவமனை இணைந்து இருதயம், மூட்டு தேய்மான இலவச மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. ரோட்டரி சங்கத் தலைவர் கந்தன் தலைமை வகித்தார். துணை ஆளுநர் அன்பழகன் முன்னிலை வகித்தார். மண்டலச் செயலாளர் சரவணக்குமார் வரவேற்றார். முகாமை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இ.எஸ். கல்விக் குழுமத் தலைவர் இ.எஸ்.சாமிக்கண்ணு தொடக்கி வைத்தார்.
மருத்துவர் ரகுவரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இருதயம் சம்பந்தமான நோய்கள், மூட்டுத் தேய்மான சம்பந்தமான நோய்களுக்கான சிறப்புப் பரிசோதனைகளை செய்தனர். தொடர்ந்து, தேவையான ஆலோசனைகள் வழங்கி, மருந்து, மாத்திரைகளை இலவசமாக வழங்கினர். அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு, அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலமாக அறுவைச் சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்யப்படும் என்று மருத்துக் குழுவினர் தெரிவித்தனர்.
ரோட்டரி சங்க நிர்வாகிகள் சிவராமன், பாலாஜி, மூர்த்தி, முரளி, முருகன், ஆறுமுகம், ரமேஷ்குமார், பாலாஜி, பாபுராஜன், கிருஷ்ணமூர்த்தி, நாகராஜன், முத்துவெங்கடசுந்தரம், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்க செயலாளர் பாலகுரு
நாதன் நன்றி கூறினார்.