பத்தாம் வகுப்புத் தேர்வில் கள்ளக்குறிச்சி ஏகேடி அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 99 சதவீத தேர்ச்சியை பெற்றது. தேர்வெழுதிய 908 மாணவர்களில் 894 பேர் தேர்ச்சி பெற்றனர்.
ஒரு மாணவர் 494 மதிப்பெண்களும், இருவர் 492 மதிப்பெண்களும், 3 பேர் 491 மதிப்பெண்களும் பெற்றனர். 490-க்கு மேல் 6 பேரும், 481-க்கு மேல் 41, 470-க்கு மேல் 93, 460-க்கு மேல் 147, 450-க்கு மேல் 182, 400-க்கு மேல் 384 பேரும் மதிப்பெண்கள் பெற்றனர். கணிதப் பாடத்தில் 5 பேரும், சமூக அறிவியலில் 17 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர். சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.