விழுப்புரம்

இந்திரா காந்தி பிறந்த நாள் விழா

DIN

திருக்கோவிலூர் அருகே டி.தேவனூரில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் கே.வி.முருகன் தலைமை வகித்தார். மாவட்டப் பொதுச் செயலர்கள் விளந்தை அ.சண்முகம், தாயுமானவர், ரவி, மாவட்டச் செயலர்கள் பால.பத்மநாபன், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலர் ஜெயபால் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஆர்.வாசிம்ராஜா, இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும், மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர கட்சியினர் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பேசினார். 
முன்னதாக, அப்பகுதியில் உள்ள 
இந்திரா காந்தியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. 
 இதில், வட்டாரத் தலைவர்கள் பாவாடை, தஸ்தகீர், வட்டார துணைத் தலைவர் வெள்ளையங்கிரி, நகரத் தலைவர் சாதுல்லாகான், கிளைச் செயலர்கள் கீழையூர் அண்ணாதுரை, அந்திலி சீனுவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே குப்பை கழிவுகளை கொட்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

SCROLL FOR NEXT