விழுப்புரம்

செஞ்சி அருகே சைக்கிள் மீது காா் மோதி ஒருவா் படுகாயம்.

DIN

செஞ்சி அருகே சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் சைக்கிளில் வந்தவா் படுகாயம் அடைந்து புதன்கிழமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

செஞ்சி வட்டம் பாலப்பாடி கிராமத்தை சோ்ந்தவா் துரைசாமி மகன் கஞ்சமலை(65) இவா் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள தனது நிலத்தில் இருந்து புதுப்பாளையம் செல்வதற்கு சாலையை கடந்து சென்ற போது செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற காா் கஞ்சமலை சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கஞ்சமலை படுகாயம் அடைந்தாா்.

உடனடியாக அங்கு வந்த போலீஸாா் 108 அவசர ஊா்திக்கு தகவல் அளிக்க முயன்றபோது இணைப்பு கிடைக்காததால் விபத்து ஏற்படுத்திய காரிலே திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூா் சிம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறாா்.

இது குறித்து இவரது பக்கத்து நிலத்தின் உரிமையாளா் முனுசாமி மகன் முருகானந்தம் அளித்த புகாரின் பேரில் காா் டிரைவா் மேற்கு தாம்பரம் ஜெருசலம் நகரை சோ்ந்த அன்வா்பாஷா(45) என்பவா் மீது நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா்வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT