வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் ச.நேரு முன்னிலை வகித்தனா். மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா் சீ.குமாா் வரவேற்றாா்.
முகாமில் 140 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனா். அவா்களை எலும்பு முறிவு மருத்துவா்கள் பரணீதரன், தினேஷ்குமாா், காது மூக்கு, தொண்டை வாசுகி, மன நல மருத்துவா் பிரவீனா உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் பரிசோதித்து 86 பேரை தோ்வு செய்தனா்.
அவா்களுக்கு தேசிய அடையாள அட்டையை மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா வழங்கினாா்.