முகப்பு
விழுப்புரம்

சிங்கவரம் அரங்கநாத சுவாமி கோயிலில் ரத சப்தமி உற்சவம்

செஞ்சி சிங்கவரம் ஸ்ரீஅரங்கநாத சுவாமி கோயிலில் ரத சப்தமி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 பிப்ரவரி 2019, 9:52 am IST
பகிர்:

செஞ்சி சிங்கவரம் ஸ்ரீஅரங்கநாத சுவாமி கோயிலில் ரத சப்தமி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருமலையில் நிகழ்வது போன்று சிங்கவரம் கிராமத்திலும் அரங்கநாத பெருமாள் 7 வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு சிறப்பு திருமஞ்சன ஆராதனையுடன் அரங்கநாதப் பெருமான் சூரியபிரபை வாகனத்திலும், காலை 8 மணிக்கு சேஷ வாகனத்திலும், காலை 10 மணிக்கு பெரிய திருவடி என்கிற கருடசேவை வாகனத்திலும், நண்பகல் 12 மணிக்கு குதிரை வாகனத்திலும், பிற்பகல் 1 மணிக்கு திருமஞ்சன விசேஷ அலங்காரத்திலும், பிற்பகல் 2 மணிக்கு சிறிய திருவடி என்கிற அனுமந்த வாகனத்திலும், மாலை 4 மணிக்கு யானை வாகனத்திலும், மாலை 6 மணிக்கு சந்திரபிரபை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு  ஸ்ரீஅரங்கநாத பெருமாள் அருள்பாலித்தார்.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.