விழுப்புரம்

அதிமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

DIN

மணம்பூண்டி ஒன்றிய அதிமுக சார்பில் டி.தேவனூரில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஒன்றியச் செயலர் எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் கே.என்.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாணவரணி ஒன்றியச் செயலர் கே.எஸ்.துரை வரவேற்றார். 
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்ற அமைச்சர் சி.வி.சண்முகம், தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், எம்எல்ஏவுமான இரா.குமரகுரு, விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கிப் பேசினர். 
மாவட்ட பிரதிநிதிகள் மகாராஜன், தாமோதரன், கலாவதி குமார், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் கிருஷ்ணன், ஊராட்சிச் செயலர் ஏழுமலை,  கிளைச் செயலர்கள் தங்க.கோவிந்தன், கணேசன், ம.க.முருகன், சீனிவாசன், ரவி, முரளி, ஆறுமுகம், துரைக்கண்ணு உள்பட பலர் 
கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT