விழுப்புரம்

கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா

DIN

விழுப்புரம் அரசு மகளிர் கலை  கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
மாணவிகள், ஆசிரியர்கள் பாரம்பரிய ஆடையில் புதுப்
பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 
விழாவில் ஆசிரியர்கள்,  மாணவிகள் கலந்து கொண்டு 
பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி: இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல்விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கல்லூரியின் தலைவர் க.மகுடமுடி தலைமை வகித்தார். கல்லூரியின் தாளாளர் ஜி.எஸ்.குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கு.மோகனசுந்தர் வரவேற்றார். 
கல்லூரியின் வளாகத்தில் மாணவிகள், பேராசிரியர்கள் பாரம்பரிய ஆடைஅணிந்து, புதுப்பானையில் பொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டனர்.
கல்லூரியின் செயலர் என்.கோவிந்தராஜு, பொருளாளர் அ.தமிழ்மணி மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரியின் துணை முதல்வர் பி.ஜான்விக்டர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT