விழுப்புரம்

கார் மோதியதில் முதியவர் சாவு

DIN


சின்னசேலம் அருகே சாலையோரம் நின்றிருந்த முதியவர் கார் மோதியதில் உயிரிழந்தார். 
சின்னசேலம் வட்டம், காளசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குஞ்சான் (65). இவர் சனிக்கிழமை காலை சின்னசேலம் செல்வதற்காக சேலம்-விருத்தாசலம் சாலையில் குரால் பிரிவு சாலையோரம் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, சேலம் பகுதியிலிருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்ற கார் முதியவர் மீது மோதியதாகத் தெரிகிறது. 
இதில் பலத்த காயமடைந்த முதியவர் நிகழ்விடத்திலே உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

மகனின் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாய் தற்கொலை

ரூ.5 லட்சம் சேமிப்புத் தொகை அபகரிப்பு: மகன் மீது வயதான பெற்றோா் புகாா்

ரயிலில் பெண் ஊழியரை கத்தியால் குத்தி நகை பறிப்பு

அரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT