விழுப்புரம்

சுந்தரேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி வழிபாடு

விழுப்புரம் மகாராஜபுரத்தில் அமைந்துள்ள மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

DIN

விழுப்புரம் மகாராஜபுரத்தில் அமைந்துள்ள மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் 38-ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழா திங்கள் கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை வரை நான்கு கால பூஜையுடன் நடைபெற்றது.
 பகல் 12.30 மணிக்கு அன்னதானத்துடன் விழா தொடங்கியது. மாலை 5 மணிக்கு முத்தால்வாழி மாரியம்மன் கோயிலிலிருந்து சுவாமிக்கு அபிஷேகப் பொருள்கள் ஊர்வலமாக வந்தது. இரவு 7 மணிக்கு முதல் கால பூஜை தொடங்கியது. மீனாட்சி அம்மன் சமேதராய் சுந்தரேஸ்வரர் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
 இரவு 10 மணிக்கு சங்கு அபிஷேகங்களுடன் இரண்டாம் கால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, இரவு 12 மணிக்கு அன்ன அபிஷேகத்துடன், மூன்றாம் கால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெற்றது.
 சுந்தரேஸ்வரர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மகா சிவராத்திரி விழாவில், திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை ஏராளமான பக்தர்கள் விடிய விடிய கண் விழித்து பூஜையில் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT