விழுப்புரம்

பொன்னமராவதி மோதல் சம்பவம்: வழக்குகளை திரும்பப்பெற கோரிக்கை

DIN

பொன்னமராவதி மோதல் சம்பவத்தில் முத்தரையர் சமூக மக்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று,  தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து,  அந்த சங்கத்தினர்,  மாவட்டத் தலைவர் தீபநாதன்,  செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் தலைமையில்,  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,  வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். 
அப்போது அவர்கள் கூறியதாவது:  முத்தரையர் இனத்தை இழிவாகவும், முத்தரையர் இன பெண்களை மிக கீழ்த்தரமாகவும் பேசி,  சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு மக்களை போராடத் தூண்டினர்.  அந்த நபர்களை உடனே கைது செய்ய வேண்டும். 
இந்த சம்பவத்துக்காக,  புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி பகுதியில்,  நியாயத்துக்காக போராடிய,  முத்தரையர் சமூக மக்கள் 1,000 பேர் மீது 5 பிரிவுகளில் போலீஸார் பதிவு செய்த வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வாயிலாக,  தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT