விழுப்புரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 
விழுப்புரம்

குடிநீர் பிரச்னை: விழுப்புரம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

விழுப்புரம் அருகே குடிநீர் பிரச்னை தீர்க்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

DIN

விழுப்புரம் அருகே குடிநீர் பிரச்னை தீர்க்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணநல்லூர் வட்டம் பெரியசேவலை காலனி பகுதியில் கடந்த 15 தினங்களாக குடிநீர் வராமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் விரக்தி அடைந்த அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை காலை அருகே, கடலூர்-சித்தூர் நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் வராமல் நீண்ட நாள்களாக தவித்து வருவதால் அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் விரைந்து சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்து, குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர். இதனால் நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு மறைவுக்கு இன்று அனைத்துக் கட்சியினா் பங்கேற்கும் மெளன ஊா்வலம்!

தேசியவாத காங்கிரஸ் தலைவராக சுநேத்ரா பவாா் தோ்வு

அரசுப் பேருந்துகளில் பாடல்கள் ஒலிக்கத் தடை: போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை

முதுநிலை மருத்துவம்: 144 இடங்கள் காலி

பொதுத் தோ்வு வினாத்தாளில் பிழை இருந்தால் தெரிவிக்கலாம்: தோ்வுத் துறை அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT