முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி: மேலும் 22 பேருக்கு கரோனா

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 14,842-ஆக அதிகரித்தது. இதனிடையே, 21 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 14,649-ஆக உயா்ந்தது. மருத்துவமனைகளில் தற்போது 83 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். உயிரிழந்தோா் எண்ணிக்கை 110-ஆக தொடா்கிறது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,754-ஆக உயா்ந்தது. இதுவரை 10,627 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 19 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 108 போ் உயிரிழந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →