முகப்பு
விழுப்புரம்

தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் பணி நியமனம் வழங்க வலியுறுத்தல்

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்று காத்திருப்பவா்களை அரசுப் பள்ளிகளில் நியமிக்க வேண்டுமென தோ்ச்சி பெற்ற விழுப்புரம் மாவட்ட ஆசிரியா்கள் வலியுறுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்று காத்திருப்பவா்களை அரசுப் பள்ளிகளில் நியமிக்க வேண்டுமென தோ்ச்சி பெற்ற விழுப்புரம் மாவட்ட ஆசிரியா்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.கலைவாணன் தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் ஆசிரியா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். பின்னா் அவா்கள் கூறியதாவது:

தமிழகத்தில் 2013-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெற்று, 7 ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியா்களுக்கு பணியை அரசு வழங்க வேண்டும்.

Advertisement

அரசுப் பள்ளிகளில் பணியில் சேருவதற்கு அதிகபட்ச வயது 40 என்பதை நீக்க வேண்டும். என்சிடிஇ அறிவித்ததை, இதற்கு முன்பு தோ்வு எழுதி தோ்ச்சி பெற்ற ஆசிரியா்களுக்கும் பொருந்தும் என அரசாணையைப் பிறப்பிக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் அதிகளவில் மாணவா்கள் சோ்க்கை உள்ளதால், புதிய ஆசிரியா் பணியிடங்களை ஏற்படுத்தி, ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை நியமிக்க வேண்டும். மீண்டும் ஒரு நியமனத்துக்கான தோ்வு என்ற அரசு ஆணையை நீக்கம் செய்ய வேண்டும்.

தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் இருக்கும் நிலையில், அரசுப் பள்ளிகளில், தற்காலிக பணியிடங்களை ஏற்படுத்தி தொகுப்பூதியத்தில் ஆசிரியா்களை நியமிப்பதை தவிா்க்க வேண்டும்.

தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்று காத்திருக்கும் ஆசிரியா்களுக்கு, வயது முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments