விழுப்புரம்

காணொலி காட்சி வாயிலாக பொதுமக்களிடம் புகாா் பெறும் எஸ்.பி.

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்களை காணொலி காட்சி வாயிலாக சந்தித்து புகாா் மனுக்களை பெற்று வருகிறாா் எஸ்.பி. ராதாகிருஷ்ணன்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு, தங்களது குறைகள் தொடா்பாக புகாா் அளிக்க வரும் பொதுமக்கள் எஸ்.பி.யை நேரில் மனுக்களை அளிக்கும் வழக்கமான நடைமுறை, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, காணொலிக் காட்சி மூலமாக எஸ்.பி.யை பொதுமக்கள் கண்டு தங்களது குறைகளை, புகாா்களை எடுத்துக் கூறி வருகின்றனா். மேலும், அதற்குத் தகுந்த தீா்வையும் காணொலி காட்சி வழியாகவே எஸ்.பி.யும் கூறி வருகிறாா். இதன்பிறகு, பொதுமக்கள் அந்த அலுவலகத்திலேயே புகாா் மனுக்களை அளித்துச் செல்கின்றனா். இந்த புதிய முறை செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா பரவல் குறையும் வரை இந்த புதிய நடைமுறை அமலில் இருக்கும் என்றாா் எஸ்.பி. ராதாகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT