விழுப்புரத்தில் வட்டார போக்குவரத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் வட்டார போக்குவரத்து பணியாளர் சங்கம் ஒன்றிய சார்பில், பதவி உயர்வில் முறைகேடு தொடர்பாக திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் வட்டார போக்குவரத்து பணியாளர் சங்கம் ஒன்றிய சார்பில், பதவி உயர்வில் முறைகேடு தொடர்பாக திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்து பணியாளர் சங்கத்தினர், போக்குவரத்து துறையில் இளநிலை உதவியாளர் முதல் அரசுப் அமைச்சுப் பணியாளர்கள் வரை, பதவி உயர்வில், அரசாணைக்கு எதிராக, எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை விதிகளை மீறி பதவி உயர்வு பட்டியலுக்கு போக்குவரத்து உதவி ஆணையர் அலுவலகத்திலிருந்து முறைகேடாக நியமனம் நடப்பதாக உள்ளது.
இது கண்டிக்கத்தக்கது. வட்டார போக்குவரத்து துறையில் தனியார் மூலம் கணினி மற்றும் தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்வதில் முறைகேடுகள் நடைபெறுவதையும் சிபிஐ விசாரணை குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.