விழுப்புரம்

மும்பையிலிருந்து சிறப்பு ரயிலில் விழுப்புரம் வந்த 242 தமிழக தொழிலாளர்கள் 

DIN

மும்பையிலிருந்து தமிழக தொழிலாளர்கள் 242 பேர் சிறப்பு ரயிலில் விழுப்புரம் வந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து இரு தினங்களுக்கு முன்பு புறப்பட்ட சிறப்பு ரயில், வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக வியாழக்கிழமை காலை 10 மணிக்கு விழுப்புரம் வந்து சேர்ந்தது.

இந்த சிறப்பு ரயிலில் திருவண்ணாமலை மாவட்டம் 123 பேர், சேலம் மாவட்டம் 28 பேர், கள்ளக்குறிச்சி 62, கடலூர் 7, புதுவை 1, விழுப்புரம் மாவட்டத்தில் 9 பேர் என 242 பேர் வந்திறங்கினர். இவர்களை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் வரவேற்று காலை உணவு வழங்கினார்.

முகக்கவசம் கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டன. இதனையடுத்து அவர்கள் பேருந்துகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT