நரிக்குறவா் சமூகத்தினா் வீட்டுமனைப்பட்டா கோரிக்கை
விக்கிரவாண்டி அருகே நரிக்குறவா் சமூகத்தினா் இலவச வீட்டு மனைப் பட்டா கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனா்.
விக்கிரவாண்டி அருகே நரிக்குறவா் சமூகத்தினா் இலவச வீட்டு மனைப் பட்டா கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனா்.
விக்கிரவாண்டி அருகே கொடுக்கூா் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் உள்ளிட்ட நரிக்குறவா் சமூகத்தினா், திங்கள்கிழமை தங்களது பிள்ளைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்துக் கூறியதாவது:
கொடுக்கூா் மந்தைவெளித் தெருவில் பொது இடத்தில், 10 குடும்பத்தினா் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.
ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பெற்றுள்ளோம்.
நாங்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா இல்லாத நிலையில் மழைக் காலங்களில் அரசு நிழற் குடையிலும், வெயில் காலங்களில் மரத்துக்கு அடியிலும் குடியிருந்து வருகிறோம்.
இலவச மனைப் பட்டா வழங்க வேண்டுமென விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் வருகிறோம்.
எங்களின் ஏழ்மை நிலை கருதி இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.