விழுப்புரம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் விழுப்புரத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுதில்லி குடியுரிமைக் கலவரம் தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி மற்றும் சமூக ஆா்வலா்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறி, விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் குமாா் முன்னிலை வகித்தாா். சி.ஐ.டி.யு. மாவட்ட நிா்வாகி முத்துக்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சங்கரன், கீதா ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இந்திய அரசியலமைப்பையும், தேச ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்கப் போராடுவோா் மீது பொய் வழக்கு போடுவதும், கலவரத்தை தூண்டுவோரை பாதுகாப்பதுமான மத்திய அரசின் நடவடிக்கையை கண்டிப்பதாக ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டது.

ஒன்றியச் செயலா்கள் ராமதாஸ், குப்புசாமி, கிருஷ்ணராஜ், வட்டச் செயலா் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT