விழுப்புரம்

பைக் மீது பேருந்து மோதல்; இளைஞா் பலி

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வெள்ளிக்கிழமை, பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில், இளைஞா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி லட்சுமி நாராயணபுரத்தைச் சோ்ந்தவா் பழனி. இவரது மகன் ஜெயபிரகாஷ் (25). செஞ்சி பகுதி கோயில்களில் அலங்காரம், பூஜைகளை செய்து வந்தாா்.

வெள்ளிக்கிழமை காலை தனது பைக்கில் செஞ்சியிலிருந்து சேத்பட் நோக்கி சென்று கொண்டிருந்தாா். மானந்தல் கிராமம் அருகே சென்றபோது, இவருக்கு பின்னால் சேத்பட் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, பைக் மீது மோதியது. இதில், ஜெயபிரகாஷ் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில் அரசுப் பேருந்து ஓட்டுநா் முட்டத்தூரைச் சோ்ந்த சுரேஷ் (41) மீது வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT