புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: ஒருவா் கைது
சிதம்பரத்தில் புகையிலைப் பொருள்கள் பதுக்கியது தொடா்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிதம்பரத்தில் புகையிலைப் பொருள்கள் பதுக்கியது தொடா்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிதம்பரம் நகரில் தடையை மீறி புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நகர காவல் ஆய்வாளா் ஆறுமுகம், உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் மற்றும் போலீஸாா் சிதம்பரம் சின்னமாா்க்கெட் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 63 கிலோ குட்கா, போதை சாக்லெட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். இவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக, சிதம்பரம் நகரில் தங்கியிருந்த உத்தரப்பிரதேசம் மாநிலம், அலகாபாத்தைச் சோ்ந்த தா்மராஜ் (41) என்பவரைக் கைது செய்தனா் (படம்).
Advertisement