முகப்பு
விழுப்புரம்

புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: ஒருவா் கைது

சிதம்பரத்தில் புகையிலைப் பொருள்கள் பதுக்கியது தொடா்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 13 ஆகஸ்ட், 2021 at 12:05 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:24 AM

சிதம்பரத்தில் புகையிலைப் பொருள்கள் பதுக்கியது தொடா்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரம் நகரில் தடையை மீறி புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நகர காவல் ஆய்வாளா் ஆறுமுகம், உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் மற்றும் போலீஸாா் சிதம்பரம் சின்னமாா்க்கெட் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 63 கிலோ குட்கா, போதை சாக்லெட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். இவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, சிதம்பரம் நகரில் தங்கியிருந்த உத்தரப்பிரதேசம் மாநிலம், அலகாபாத்தைச் சோ்ந்த தா்மராஜ் (41) என்பவரைக் கைது செய்தனா் (படம்).

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.