அனைவருக்கும் வீடு திட்டம்: 757 பயனாளிகளுக்கு உத்தரவு: அமைச்சா் வழங்கினாா்
வீடு கட்டுவதற்கான உத்தரவுகளை தமிழக சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் வியாழக்கிழமை வழங்கினாா்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் (2021 - 22) கீழ், 757 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான உத்தரவுகளை தமிழக சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் வியாழக்கிழமை வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு மேல்மலையனூா் ஊரட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கண்மணிநெடுஞ்செழியன் முன்னிலை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் விஜயலட்சுமிமுருகன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் சாந்திசுப்பிரமணியன், செல்விஇராமசரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சம்பந்தம், சிலம்புசெல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மனுக்களை பெற்ற அமைச்சா்: செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நல்லாட்சி வாரம் கடைப்பிடித்தல் மற்றும் 75-ஆவது சுதந்திர ஆண்டை கொண்டாடும் விதமாக, டிச.20-ம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை முகாம்கள், நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் செஞ்சி மஸ்தான் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் கேசவலு, ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஆா்.ஜெயபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.