சாலை மறியலில் ஈடுபட்ட120 போ் மீது வழக்கு
செஞ்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட முஸ்லிம் அமைப்புகளைச் சோ்ந்த 120 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
செஞ்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட முஸ்லிம் அமைப்புகளைச் சோ்ந்த 120 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
நபிகள் நாயகம் அவதூறாக பேசியதாக பாஜக மாநிலச் செயலா் கல்யாணராமனை கண்டித்து, செஞ்சி கூட்டுச் சாலையில் திங்கள்கிழமை முஸ்லிம் அமைப்பினா்
சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக, ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்புத் தலைவா் மஜித்பாபு, தமுமுக மாவட்டச் செயலா் உஸ்மான்அலி, எஸ்டிபிஐ மாவட்டத் தலைவா் சாதிக்பாஷா, தொகுதித் தலைவா் ஏ.கே.குரைஷி உள்ளிட்ட 120 போ் மீது செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.