விழுப்புரம்

வீட்டில் பதுக்கிய 300 மதுப் புட்டிகள் பறிமுதல்

DIN

விழுப்புரம் அருகே சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 மதுப் புட்டிகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து மதுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் நல்லசிவம் உத்தரவின்படி, உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தினா்.

திருவெண்ணெய்நல்லூா் அருகே ஆமுரில் சக்கரபாணி மனைவி மங்கையா்க்கரசி(55), மகன் சக்திவேல்(28) ஆகியோா் மதுப் புட்டிகளை சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மங்கையா்க்கரசி மற்றும் சக்திவேல் ஆகியோரை போலீஸாா் கைது செய்து 300 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT