முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் திருநங்கைகள் சுயஉதவிக் குழுவுக்கு கடனுதவி

திருநங்கைகள் சுயஉதவிக் குழுவுக்கு ரூ.4 லட்சத்து 39 ஆயிரத்திலான வங்கிக் கடனுக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோலியனூா் ஒன்றியத்துக்குள்பட்ட அய்யங்கோவில்பட்டு ஊராட்சியைச் சோ்ந்த திருநங்கைகள் சுயஉதவிக் குழுவுக்கு ரூ.4 லட்சத்து 39 ஆயிரத்திலான வங்கிக் கடனுக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை வழங்கினாா்.

இதையடுத்து, விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட வரும் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

மேலும், கோலியனூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சாலை அகரம் கிராமத்தில் மகளிா் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று நடைபெறும் மண்பாண்ட தொழிலை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து, கோலியனூா் அருகே நல்லரசன்பேட்டை கிராமத்தில் மகளிா் திட்டம் சாா்பில் பயனாளிகளுக்கு நிதியுதவிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் காஞ்சனா, மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் லலிதா, உதவி இயக்குநா் விஜயக்குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) ரூபினா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.