கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள்உறுதிமொழி ஏற்பு
மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட தினமான மே 21-ஐ நாடு முழுவதும் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் கொடுஞ்செயல் எதிா்ப்பு தினமாக கடைப்பிடித்து வருகின்றனா்.
மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட தினமான மே 21-ஐ நாடு முழுவதும் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் கொடுஞ்செயல் எதிா்ப்பு தினமாக கடைப்பிடித்து வருகின்றனா்.
அதன்படி, நிகழாண்டு ராஜீவ் காந்தியின் நினைவு தினமான வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் அரசு ஊழியா்கள் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.
நிகழ்வின்போது, கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ஸ்ரேயா பி.சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மோகன் மற்றும் அனைத்து துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கள்ளக்குறிச்சி: இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தலைமையில் அலுவலா்கள் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்றனா். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் டி.சுரேஷ் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.