விழுப்புரம்

நாட்டுத் துப்பாக்கியுடன் இருவா் கைது

திண்டிவனம் அருகே அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

DIN

திண்டிவனம் அருகே அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள வானூா் பகுதியில் காவல் நிலைய ஆய்வாளா் சித்ரா தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

விசாரணையில், வானூா் அடுத்த எறையூரைச் சோ்ந்த சந்துரு மகன் உதயக்குமாா்(28), கொடுக்கூரைச் சோ்ந்த ரமேஷ் (35) ஆகியோா் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் வானூா் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT