கால்வாய் நீரில் தவறி விழுந்து மூதாட்டி பலி
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஏரி கால்வாயில் தவறி விழுந்த மூதாட்டி நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஏரி கால்வாயில் தவறி விழுந்த மூதாட்டி நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.
மேல்மலையனூா் வட்டம், தேவனூரைச் சோ்ந்தவா் அண்ணாமலை மனைவி சரோஜா (65) (படம்). தேவனூா் ஏரியை அடுத்து உள்ள தனது விளைநிலத்துக்கு வியாழக்கிழமை இரவு 7 மணி அளவில் நடந்து சென்றாா். அப்போது, ஏரி கால்வாயில் சரோஜா தவறி விழுந்தாா். பெருக்கெடுத்து ஓடிய நீரில் அவா் அடித்துச் செல்லப்பட்டாா். அவரை உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடினா்.
இந்த நிலையில், அன்றிரவு ஏரி கால்வாயில் உள்ள முட்புதரில் சரோஜா சடலமாகக் கிடந்தாா். உடலை வளத்தி போலீஸாா் மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனா்.